வீட்டில் செல்வம் சேர, சேர்த்த செல்வம் நிலைக்கச் சரி பார்க்க வேண்டிய விசயங்கள்.
- காசு பணத்தை மதிக்க வேண்டும்.
- பணத்தை மரியாதையுடனும், மதிப்புடனும் கையாள வேண்டும்.
- பணத்தைச் சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.
- பணத்தைக் கணக்கு வைத்துச் செலவு செய்ய வேண்டும்.
- பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளாமல் வங்கியில் போட்டு, தேவைக்கு ஏற்ப எடுத்து செலவு செய்வது நல்லது.
- நமது சேமிப்புக்கு அதிகமாக உள்ள பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
- வரும் பணத்திலிருந்து சிறிய அளவையாவது சேமித்து வைக்க வேண்டும்.
- வீண் விரயம் மற்றும் கஞ்சத்தனம் இருக்கக் கூடாது.
- உரிமை உள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும் இருப்பதில் கொடுக்க வேண்டும்.
- பணத்தை வாங்கும் போது இரண்டு கைகளால் வாங்குவது நல்லது.
- வீடு தரையை விடவும், சாலையை விடவும் பள்ளமாக இருக்கக் கூடாது.
- வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது.
- வீடு எந்த நேரத்திலும் இருட்டாக இருக்கக் கூடாது.
- பொழுது சாயும் நேரங்களில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். காலை வரையில் அணைக்கக் கூடாது.
- முடியாதவர்கள் மஞ்சள் அல்லது சிகப்பு வர்ண விளக்கை ஏற்ற வேண்டும்.
- காற்றும் மற்றும் வெயிலும் வீட்டின் உள்ளே வந்து போகும் அளவில் ஜன்னல் திறந்து இருக்க வேண்டும்.
- வீட்டின் நுழை வாயிலில் செருப்பைக் கழட்டிப் போடக் கூடாது.
- வியாழக்கிழமை மாலை ஊதுவத்தி ஏற்றுவது நல்லது.
- தற்போது உங்களிடம் இருக்கும் அனைத்துக்காகவும் இறைவனுக்கு தினம் நன்றி கூறுங்கள்.
- முந்தைய ஜென்மங்களிலிருந்து இன்று வரையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.